ரஷ்ய எண்ணெய்க் கிடங்கு மீது தாக்குதல்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

மாஸ்கோ, ஏப் 1

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 37வது நாளாக நீடிக்கின்ற நிலையில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷ்யா, இப்போது உக்ரைன் தலைநகர் கீவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யாவின் வான் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்களில் உட்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  உக்ரைன் படைகளும் சளைக்காமல் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், உக்ரைன் எல்லையை ஒட்டிய ரஷ்ய பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எண்ணெய் கிடங்கு கொளுந்து விட்டு எரிகிறது.

எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஊழியர்களில் இருவர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயணைப்பு பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

ரஷ்யாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள அந்த எண்ணெய் கிடங்கின் மீது, உக்ரைனின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Posts