அமைச்சரின் வீட்டைத்தாக்கிய 8 பேர் பிணையில் விடுதலை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு,ஏப் 7

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டங்களை நடாத்தி வரும் நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீட்டை தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வியாழக்கிழமை பொலன்னறுவை மேலதிக நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி எஸ்.கே.விக்ரமரத்ன முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேக நபர்கள் தலா ரூ. 20,000 பெறுமதியான ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பொலன்னறுவையில் உள்ள வீட்டின் மீது கடந்த திங்கட்கிழமை இரவு குறித்த நபர்கள் தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.