இன்றும் தொடர்கிறது பணிப்புறக்கணிப்புப் போராட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அஞ்சல் சேவையாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இன்று நள்ளிரவு வரையில் இந்த போராட்டம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அஞ்சல் நிலையக் கட்டிடங்கள் மற்றும் காணிகளை வெளிநாட்டு உணவக வேலைத்திட்டத்துக்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

இதேவேளை இந்த போராட்டம் தொடர்பில் பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு ஒழுங்கு செய்து தருவதாகவும், போராட்டத்தை கைவிடுமாறும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்துள்ள போதும், அதில் நம்பிக்கையில்லையென அஞ்சல் சேவை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.