விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ.எஸ்.இராதாகிருஸ்ணன் இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி அமைச்சு ஊடாக பாடசாலைகளுக்கான 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டிருந்த நிலையில், தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டதுடன், விண்ணப்பிக்கும் இறுதி திகதியாக இன்று பிற்பகல் 3.00 மணி வரை குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 02 நாட்களுக்கு முன்பு தபால் ஊழியர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க போராட்டம் காரணமாகவும், அநேகரின் வேண்டுகோளுக்கு இணங்கவும் விண்ணப்பங்களை எதிர்வரும் 29.06.2017 வரை அனுப்பி வைக்க முடியுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.