
ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொழும்பு – பதுளை வீதியில் பெரகலைக்கும் ஹபுத்தளைக்கும் இடையிலான செங்குத்தான பகுதியில் அவ்வப்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அவ்வீதியில் பயணிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு ஹப்புத்தளை பொலிஸார், சாரதிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.