
நரேந்திர மோடி எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி 3ஆவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
அதன்படி, அவர் ஜூன் 9ஆம் திகதி மாலை 6.30ற்கு ராஷ்டிரபதி பவனில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றையதினம் மோடி மாத்திரம் பதவியேற்பார் என்றும், பின்னர் அமைச்சர்கள் பதவியேற்பார்கள் எனவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் குடியரசுத் தலைவர் இல்லத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.