
கண்டி வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி இன்று காலை 6.45 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியினூடாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
சாலையின் இருபுறமும் உள்ள அபாயகரமான மரங்கள் மற்றும் பழுதடைந்த கிளைகளை அகற்றும் பணிக்காகவும், ஆபத்தான பாறை பாகங்களை அகற்றுவதற்காகவும் நேற்று குறித்த வீதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது