இளைஞனை குடிபோதையில் காரினால் மோதிய வைத்தியருக்கு 5 இலட்சம் ரூபா சரீரப்பிணை

முக்கிய செய்திகள் 1

மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற இளைஞனை குடிபோதையில் காரில் சென்று மோதி தப்பி சென்ற வைத்தியரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டதுடன் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு 1 இலட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்க வேண்டும் எனக் கட்டளையிட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை வழக்கினை கல்முனை நீதிவான் நீதிமன்று ஒத்தி வைத்துள்ளது.

குறித்த வழக்கு திங்கட்கிழமை (10) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் சமர்ப்பணம் உள்ளிட்ட வாதி பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் ஆகியோரின் சமர்ப்பணம் வாதங்களின் அடிப்படையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற பேரிம்பராஜா பகிர்தன் (வயது-41) வயது மதிக்கத்தக்க வைத்தியரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டதுடன் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு 1 இலட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி மறுவிசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.குறித்த விபத்தில் சிக்கிய வைத்தியரின் வாகன அனுமதி பத்திரம் காலாவதியாகி உள்ளமை , அபாய நிலையில் வாகனத்தைச் செலுத்தியமை, மது போதையில் சென்றமை, உள்ளிட்டவைக்காக ரூபா 80 ஆயிரத்திற்கும் மேல் அபராதம் மறு வழக்கு தவணையில் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending Posts