பிரதமரை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

முக்கிய செய்திகள் 2

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று வியாழக்கிழமை (20) பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தார்.

இது தொடர்பில் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில்,

இன்று வியாழக்கிழமை பிற்பகல் இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன்.

அபிவிருத்தி மற்றும் தொடர்புகளுக்கான முன்னெடுப்புகள் ஊடாக இந்தியாவின் வலுவான ஆதரவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

எமது அபிவிருத்தி உதவிகள் மற்றும் ஆளுமை விருத்தி செயற்திட்டங்கள் ஊடாக இலங்கை மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமென நாம் நம்புகின்றோம் என பதவிட்டுள்ளார்.

Trending Posts