
நுவரெலியா பிரதேசத்தில் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செபெல்டன் தோட்டத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 26, 37, 48, 50 மற்றும் 58 வயதுடைய ஐந்து நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.