சிராஜுக்கு அரசின் சார்பில் வீடு மற்றும் அரசுப் பணி

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்று அசத்தியது. இதனையடுத்து அணியில் இடம் பிடித்த வீரர்கள், பயிற்சியாளர் என அனைவருக்கும் சேர்த்து ரூ. கோடியை பிசிசிஐ வழங்கியது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த முகமது சிராஜூக்கு தெலுங்கானா முதலமைச்சர் அவரை பாராட்டி பரிசுகளை அறிவித்துள்ளார்.

அந்த வகையில் தெலுங்கான முதலமைச்சரான ரேவந்த் ரெட்டி இந்திய வீரரான சிராஜை நேரில் அழைத்துப் பாராட்டி, அவருக்கு மாநில அரசின் சார்பில் ஹைதராபாத்தில் ஒரு வீடும், அரசாங்க வேலையும் தரப்படும் உறுதி அளித்துள்ளார்.

Trending Posts