
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாவது முனையத்தின் அபிவிருத்திப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சலுகைக் கடனுதவியின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.