வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தில் இசை நிகழ்ச்சியில் மோதல்: ஒருவர் கொலை!   

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்  ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

உயிரிழந்தவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

இந்த மோதலில்  வீரகெட்டிய மொரயாய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்  5 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள்  தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை மோசமான நிலையில் இல்லை எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Trending Posts