
கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் விழிப்புணர்வு செயற்திட்டத்தைக் கல்வி அமைச்சுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.
முதல் கட்டமாக நேற்றையதினம் (15) இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வு, மூதூர் சேனையூர் கல்லூரி, ஶ்ரீ ஹன்பஹா வித்தியாலயம், இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்றது.
இதன்போது 1,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.