
குருணாகலில் வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமங்கல - கினிமான்ன வீதியில் நாவின்ன பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (15) திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
சுமங்கலயிலிருந்து கினிமான்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த பெண்ணும் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாரியப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் வாரியப்பொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.