மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு!

முக்கிய செய்திகள் 1

பதுளை வினீதகம வீதி குண பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை வினீதகம வீதி குண பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த நபர், தனது தோட்டத்தில் உள்ள பயிர்களை விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட மின்வேலியை சீரமைக்கச் சென்றபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முதியவரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Posts