நமுனுகுல கந்தசேன தோட்டப் பகுதியில் வெட்டி வீழ்த்தப்பட்ட மரம் ஒன்றில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் 66 வயதுடைய நமுனுகுலை கனவல்ல 13 ம் கட்டைப் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உரிமையாளர் தனது காணியில் உள்ள கரப்பன்டைன் மரத்தினால் தனது வீட்டுக்கு ஆபத்தான விளைவுகள் ஏதும் ஏற்படக்கூடும் என எண்ணி சட்டபூர்வமாக அனுமதி பத்திரத்தை பெற்று குறித்த மரத்தை இன்று காலையில் வெட்டியுள்ளார்.
மரத்தை வெட்டிய போது மரம் சாயும் திசையில் உயிரிழந்த நபர் நின்றதால் மரத்தின் கிளைகள் இவர் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹிங்குருகடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.