மாத்தளையில் கார் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் பலி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

மாத்தளை, தம்புள்ளை - பக்கமுன வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (19) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

பக்கமுனவிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கார் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Posts