குழந்தையை பார்க்கச் சென்ற தந்தை விபத்தில் உயிரிழப்பு

முக்கிய செய்திகள் 1

கொழும்பு - காலி பிரதான வீதியில் வடக்கு பயாகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது குழந்தையைப் பார்ப்பதற்காகச் சென்ற 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மக்கொன அக்கரமலை பகுதியைச் சேர்ந்த மொஹமட் சுல்பிகார் மொஹமட் இஸ்தான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையை பார்வையிடச் சென்ற போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

Trending Posts