இராணுவ லொறி மோதி ஒருவர் பலி

முக்கிய செய்திகள் 1

கேகாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி - கொழும்பு வீதியில் பல்லபான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (29) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இராணுவத்தினருக்குச் சொந்தமான லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை - கலிகமுவ பகுதியில் வசிக்கும் 66 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரது சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Posts