பலியான மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: ஸ்டாலின்!

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினரின் படகொன்றுடன் மோதியதில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் அறிக்கையொன்றின் மூலம் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குமாறு தமிழக அரசு பலமுறை கடிதங்கள் மூலமாகவும், நேரிலும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உரிய தூதரக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இன்னும் பல மீனவர்களை இழக்க நேரிடும் என்றும் தனது அறிக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

Trending Posts