அலுவலகத்தில் அத்துமீறிய ஜோடி: நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் லியூ என்பவருக்கு சென் என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே திருமணமான இருவரும் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளனர். இதனை லியூவின் மனைவி கண்டுபிடித்துள்ளார். பின்னர் நிறுவனத்தின் மேனேஜரிடம் இது தொடர்பாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க லியூ விடுப்பு எடுத்துள்ளார். பின்னர் இந்த விவகாரம் முடிவுக்கு வந்தபிறகு அலுவலகத்தில் வைத்து இருவரும் முத்தமிட்டு கொண்டது மீண்டும் பிரச்சனையை உருவாக்கியது.

பின்னர் நிறுவன விதிகளை மீறியதாக இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். . இதனையடுத்து, பணிநீக்கத்தை எதிர்த்து இருவரும் தனித்தனியாக சுமார் ₹3 லட்சம் நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Trending Posts