தீபாவளியை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விடுமுறை!

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழிமூல அரச பாடசாலைகளுக்கும் நவம்பர் 1ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலாக எதிர்வரும் 09 ஆம் திகதி சனிக்கிழமை குறித்த பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Trending Posts