பச்சிளம் குழந்தையை இணையம் மூலம் விற்பனை செய்ய முயன்ற தாய் கைது!

செய்திகள் முக்கிய செய்திகள் 3

அமெரிக்கா - டெக்சாஸில் குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே இணையம் மூலம் விற்பனை செய்ய முயன்ற தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
ஜுனிபெர் ப்ரைசன் என்ற 21 வயதுடைய இளம் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 
 
தத்தெடுத்துக் கொள்ளுமாறு முகப்புத்தில் பதிவிட்ட அவர், தத்தெடுக்க வருவோரிடம் 200 டொலர் பணம் கேட்டு வாதிட்டுள்ளார்.
 
இதனை அறிந்த அயல் வீட்டார், குழந்தைகள் பாதுகாப்புத் துறையிடம் சம்பவம் தொடர்பில் முறைப்பாடளித்துள்ளனர்.
 
குறித்த முறைப்பாட்டிற்கமைய அந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அந்நாட்டுக் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Trending Posts