கேரளாவில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம்!

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

கேரளா - கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நாளை (20) முதல் செயல்பட உள்ளது. 
 
இந்தியாவிலேயே முதலாவது முழுமையான டிஜிட்டல் நீதிமன்றமான இதனை, கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கேரள உச்ச நீதிமன்றத்தில் நடந்த விழாவின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்துள்ளார். 
 
இந்நிலையில் நாளை (20) முதல் அது செயற்பாட்டுக்கு வருகின்றது. 
 
இந்த நீதிமன்றத்தில் மக்கள் 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யலாம். 
 
பிணை பெறுவதற்குக் கட்சிக்காரர்கள் மற்றும் பிணைதாரர்கள் முன்னிலையாகத் தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
 
அவர்கள் பிணையைப் பெறுவதற்கான ஆவணங்களை இணையம் மூலம் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Trending Posts