பொரளையில் கொக்கெய்னுடன் ஒருவர் கைது

முக்கிய செய்திகள் 1

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்பன்டைன் வீதியில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து , 5 கிராம் 255 மில்லி கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Trending Posts