ஆகாயத்தில் இருந்து விழுந்த ஒருவகை திரவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மாணவிகள் 18 பேரே இவ்வாற அணுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதிய நேர இடைவேளையின் போது மாணவர்கள் மைதானத்தில் நின்றிருந்த நேரம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆகாயத்தில் இருந்து தரை நோக்கி வந்த மஞ்சள் நிற திரவமொன்று மாணவிகளில் கைகளில் பட்டதினால் உடல் சிவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார வைத்திய அதிகாரி மாணவர்களை பார்வையிட்டு வைத்திய சாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்செ பெற்ற வருகின்றனர்.