வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

செய்திகள்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

பௌத்த பிக்கு ஒருவரை அவதூறாகப் பேசினார் எனும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக கொழும்பிற்கு வருமாறும் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணைக்காக கொழும்புக்கு வருவதற்குத் தாம் தயாராக இல்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

விசாரணையாளர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினார்கள் அவர்களுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.