யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளின் ஊடாகவே உண்மை வெளிப்படுமென அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் அறிந்துகொண்ட தகவல்களுக்கமைய, அது திட்டமிடப்பட்டதொன்றல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளின் முடிவுகள் குறித்து பார்க்க வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.