கிழக்கு மாகாணத்தில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

முக்கிய செய்திகள் 2

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாலர் பாடசாலைகளில் ஒரே தினத்தில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிரமதானத்தில் 1856 பாலர் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 4062 ஆசிரியர்களும் பங்குபற்றியதுடன், பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர், பொலிஸார், முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

வேகமாக பரவிவரும் டெங்கின் தாக்கத்தில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.