அரிசிப் பற்றாக்குறை ஏற்படாது – மஹிந்த அமரவீர

முக்கிய செய்திகள் 2

நாட்டினுள் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட இடமளிக்கப் போவதில்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்காக தற்போது 25 சதம் மட்டுமே வரியாக அறவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோவை 75 ரூபாவுக்கும், பொன்னி சம்பா ஒரு கிலோ 72 - 75 ரூபாவுக்கும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், கோதுமை விதைக்கான இறக்குமதி வரி 9 ரூபாவில் இருந்து 6 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி 25 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.