மாலபே தனியார் பல்கலைக்கழக விவகாரம்; மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு

செய்திகள்

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் சபைக்கு சாதாரண சமூகத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சரத் விஜேசூரிய உள்ளிட்ட அறுவர் நியமிக்கப்பட்டமைக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நெவில் பெர்னான்டோ மருத்துவமனை அரசாங்கத்தினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையானது போலியானதென சங்கத்தின் ஊடக பேச்சாளரான சமந்த ஆனந்த தெரிவித்துள்ள அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் மோசடி ஆணைக்குழுவில் முறைபாடொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.