பட்டதாரிகளின் போராட்டத்திற்குத் தீர்வு – சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முகாமைத்துவ திணைக்களத்திற்கு அனுப்பி அதற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அமைச்சரவையின் அனுமதிகள் கிடைத்த பின்னர் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஐpனோல்ட் குரே தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வின் போது, வடமாகாணத்தில் பின்தாங்கியுள்ள பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் 150 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் ஆளுநர் ரெஐpனோல்ட் குரேயினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் மக்கள் காணிகள் தொடர்பான போராட்டத்தில் நாங்கள் ஐனாதிபதியிடம் எடுத்துக் கூறியதாகவும், அதன் பின்னர் பாதுகாப்பு தலைமையகம், படைத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தையினை நடாத்தியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து வடமாகாணத்திலுள்ள இராணுவ படைத்தளபதி இருக்கும் இடங்களிலும் அதில் உள்ள மக்கள் பிரதிநிதிகளையும் சேர்த்து உடனடியாக விடுவிக்க வேண்டிய இடங்களை விடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பாக பேச்சுவார்த்தையை நாளை முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் நடத்தி மற்றும் கிழக்கு மாகாணத்திலும் இதனைப்பற்றி நடைமுறைப்படுத்தி விட்டு வரைபடங்களோ உடனடியாக விடுவிக்கப்ப வேண்டிய இடங்கள் பற்றியும் ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். இந்திய துணைத்தூதுவர் அ.நடராஐன், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாண அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.