கந்தகாடு கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கந்தகாடு,ஜுன் 30

கந்தகாடு போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற கைதிகளை மீண்டும் கைது செய்ததன் பின்னர், பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொலன்னறுவை, அனுராதபுரம், தும்பறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய சிறைச்சாலைகளில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (கட்டுப்பாடு, புனர்வாழ்வு, ஊடகப் பேச்சாளர்) திரு.சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.