வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் போராட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வவுனியா,ஜுன் 30

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேநேரம், கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1932 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாதாந்தம் 30ஆம் திகதி கவனயூர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனடிப்படையில், இன்றைய தினமும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.