பலாலிக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படாமைக்கு டக்ளஸ் விளக்கம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ்ப்பாணம்,ஜுலை 02

பலாலி விமான நிலையத்திற்கான விமான சேவைகளை நடத்துவதற்கு முன்வந்திருந்த தனியார் நிறுவனத்தின் வருமானம் தொடர்பான எதிர்பார்ப்புக்களே, திட்டமிட்டவாறு குறித்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்படாமைக்கு காரணம் என்று தெரியவருவதாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக மனம் வருந்துவதாக  தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், பலாலி - திருச்சி, சென்னை விமான நிலையங்களுக்கு இடையில் விமான சேவையை ஆரம்பிப்பதற்கு தன்னாலான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.