எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இனிமேல் டோக்கன் முறை இல்லை

சிறப்புச் செய்திகள் செய்திகள்

கொழும்பு, ஜுலை 04

எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் காணப்பட்ட நீண்ட வரிசைகளைக் குறைக்க ஆரம்பத்தில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் வரிசையில் நிற்பதில் இருந்து விடுவிப்பதற்காகவும் ஜூலை 11 அல்லது 15ஆம் திகதிகளில் எரிபொருள் கிடைத்தவுடன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் செல்லுமாறு அவர்களுக்குத் தெரிவிக்கவும் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதென்றும் சில நாட்களுக்கு மட்டுமே இந்த முறை தொடங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அதன்பின்னர் அது தற்போது வியாபாரமாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.