அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லையென நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பின் முன்னணி ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண விருந்துபசார வைபவமொன்றில் பங்கேற்றிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், தான் அமைச்சுப் பதவியை துறக்கப் போவதில்லை எனவும், அரசாங்கம் விரும்பிய தீர்மானத்தை எடுக்கும் வரையில் காத்திருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்று போலவே இன்றும் தாம் சரியான விடயங்களை கூறுவதற்கு அஞ்சியதில்லை எனவும், அண்மையில் தான் வெளியிட்ட கருத்துக்களுக்கு பௌத்த மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவளித்து வருவதாகவும் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.