நுகர்வோர் அதிகார சபை பலப்படுத்தப்படும்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நுகர்வோரை பாதிப்புக்குள்ளாக்கும் அமைப்புக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக செயற்படும் வகையில் நுகர்வோர் அதிகாரச பையை பலப்படுத்துவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சில அமைப்புக்கள் சில வகையான நுகர்வுப் பொருட்களின் விலைகளை நினைத்தவாறு அதிகரித்துக் கொண்டிருப்பதாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு தேங்காயை 65 ரூபா படி 15 இலட்சம் தேங்காய்களை நகரப் பகுதிகளுக்கு வழங்க தேங்காய் விநியோக சபை மூலம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.