ஐ.நா பொதுச் செயலாளர் இலங்கை சென்று ஆராய வேண்டும் – வைகோ

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் இலங்கைக்கு சென்று நேரில் நிலைமையைக் கண்டறிய வேண்டுமென வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத்தில் பங்கேற்று சென்னை திரும்பிய வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், ஜெனீவா நடந்த மனித உரிமை ஆணையகக் கூட்டத்தில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்திப் பேசியதுடன், ஐ.நா பொதுச் செயலர் இலங்கை சென்று நேரில் நிலைமையைக் கண்டறிய வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.