பாகிஸ்தான் பிரஜை கைது

செய்திகள்

70 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 708 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர் கட்டுநாயக்க பொலிஸ் போதைத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.