அரசியல் கைதிகளின் உடல்நிலையில் பாதிப்பில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகள் மூவரின் உடல்நிலையில் பாதிப்பு இல்லையென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கைதிகள் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கு அமைய உடல் நிலையில் பாதிப்பு இல்லையென மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடக பேச்சாளர் துஸார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார்.