புற்றுநோய் மருந்து விற்பனை விவகாரம்: விசாரணைகளை ஆரம்பிக்க உத்தரவு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

புற்றுநோய்க்காக வழங்கும் மருந்தை நோயாளிக்கு அதிக விலைக்கு விற்றதாக கூறப்படும் தனியார் மருந்தகம் ஒன்று தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.

நோயாளி ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு இலட்சத்து 25,000 ரூபாவுக்கு குறித்த மருந்தை இறக்குமதி செய்துள்ள அந்த நிறுவனம், அதனை நோயாளிக்கு நான்கு இலட்சத்து 29,000 ரூபாவுக்கு விற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த விடயம் தொடர்பில், உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார்.