காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில், ஜனாதிபதியுடனான சந்திப்பின் முடிவுகளில் திருப்தியில்லை எனவும் இவ்விவகாரத்துக்கு, சர்வதேச விசாரணையே அவசியம் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .
வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.