மீண்டும் ஒருமுறை இலங்கையை தரமிறக்கிய ஃபிட்ச்!

செய்திகள் முக்கிய செய்திகள் 3

ஃபிட்ச், தரமதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணயக் கடன் மதிப்பீட்டை சீசீசீ இலிருந்து 'சீசீ'க்கு இரண்டு புள்ளிகளால் தரமிறக்கியுள்ளது.

அதிக வட்டி வீதங்கள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் காரணமாக, உள்ளூர் நாணயங்களிலான கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் காரணம் காட்டியே, இந்த தரமிறக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை பிரதிபலிக்கும் வகையில்,இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கடன் மதிப்பீட்டையும் ஃபிட்ச், நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.