காணி வழங்கல் தொடர்பில் புதிய சட்டம் – ஜனாதிபதி

முக்கிய செய்திகள் 2

நாட்டிலுள்ள அரச காணிகள் எதற்காக ஏனையோருக்கு வழங்கப்படுகிறது என்பது தமக்கு தெரியாது என்றும் ஒவ்வொரு நிறுவனங்களும் அவற்றின் விருப்பத்திற்கு ஏற்ப காணிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆகவே இதனை நிறுத்தி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் ஊடாக உருவாக்கப்படும் திணைக்களத்தின் ஊடாக காணி வழங்கல் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் சிறந்ததும், பலம்மிக்கதுமான பொருளாதாரத்தை உருவாக்குவதே தனது எதிர்பார்ப்பு என்றும் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்திலிருந்து இது ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2023 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.