பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த நபர் கைது

முக்கிய செய்திகள் 1

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த இளைஞனை நுகேகொட, தெல்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

போக்குவரத்து விதிமீறலுக்காக டிக்கெட் வழங்க முயன்ற இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை இந்த இளைஞன் திட்டிய விதம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில் விசாரணைகளை அடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்