பாடசாலைகளை நாளை மூடுவது தொடர்பில் தீர்மானிக்க கோரிக்கை!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு,டிச 08

வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை (வெள்ளிக்கிழமை) பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர், சரா.புவனேஸ்வரன் கல்வி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அக் கடிதத்தில் தெரிவருவதாவது ” நாடு முழுவதும் வளிமண்டலம் மோசமாக உள்ளது. மலையக பிரதேசங்களில் சூறாவளியுடன் குளிந்த காலநிலைய மாறியுள்ளது

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மிகையான குளிருடன் மழையும், அச்சுறுத்தலான தூசுகள் நிறைந்த காற்றும் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் நாளை பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு போக்குவரத்து என்பவற்றில் கவனம் செலுத்தி பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக அவசர தீர்மானம் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளனர்.