ஏ-9 வீதியில் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல்?

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணம் - கொழும்பு ஏ-9 வீதியில் நீண்டகாலமாக போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாக பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளமைக்கு அமைவாக நேற்று இரவு விஷேட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணிவரை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்ற போது, 26 பேருந்துகள் உள்ளிட்ட அதிகளவான வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆடுகளை, வேன் மற்றும் பாரவூர்தியிலும் சட்டவிரோதமாக ஏற்றிச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.