யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் இளவாலை பொலிசாரால் அதிரடியாக கைது நேற்றையதினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன்கோவிலில் நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் அடங்கிய கும்பலால் இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் ஆலயங்களில் இடம்பெற்ற பல்வேறுபட்டநகை திருட்டுகளுடன் குறித்த கும்பலுக்கு தொடர்புள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை பவுண் நகை இவ்வாறு களவாடப்பட்டது. […]

Continue Reading

கிழக்கு மாகாணத்தில் வியட்நாம்-இலங்கை வர்த்தக உச்சி மாநாடு

கிழக்கு மாகாணத்தின் வர்த்தகர்கள் மற்றும் வியட்நாம் இலங்கைத் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் மற்றும் மாகாண ஆளுநர் அனுராதா யம்பத் ஆகியோர் தலைமையில் வியட்நாம்-இலங்கை வர்த்தக உச்சி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பாசிக்குடா அமயா பீச் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் வியட்நாம் வர்த்தகர்களுக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் வர்த்தகர்கள் வியட்நாமில் செய்யக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் […]

Continue Reading

போதை பொருள் கடத்தலில் மீனவர்களா? – நாகவிகரை விகாராதிபதி

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அச்சமூட்டும் வகையில் அதிகரித்துள்ள நிலையில், குறித்த போதைப் பொருட்கள் கடத்தலில் மீனவர்கள் சம்மந்தப்படாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலமே போதைப் பொருள் கடத்தலை தடுக்க முடியும் எனவும் நாகவிகாரை விகாராதிபதி தெரிவித்துள்ளார். வடக்கில் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றமையை தடுத்து நிறுத்துவதற்கான கோரிக்கையை முன்வைப்பதற்காக விகாராதிபதியை சந்தித்த யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவர் உட்பட்ட குழுவினரிடமே குறித்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் 2021 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது தேசிய ரீதியில் தமிழ் மொழியில் முதலாம் இடத்தினை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் மாணவர் பெற்றிருந்த நிலையில் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் 2022 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது குறித்த […]

Continue Reading

அடுத்த பிரதமர் சுமந்திரன் அதிர்ச்சி தகவல்!?

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே சுமந்திரன் எம்.பி. இன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதன்போது, நாடாளுமன்றத்தினை கூட்டுவதற்கு முன்னர், பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும் எனக் கட்சித் தலைவர்களினால் கருத்து முன்வைக்கப்படடது. இந்நிலையில் அடுத்த […]

Continue Reading

யாழில் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பேரணி

விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்களால் சைக்கிள் பேரணி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை யேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மல்லாகத்திலிருந்து வலிவடக்கு பிரதேச சபை வரை சைக்கிள் பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் தற்போதைய பொருள் யேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிவடக்கு பிரதேச சபையின் சகல பிரதேச சபை உறுப்பினர்களும் […]

Continue Reading

யாழில் துயரம் : மூன்று மாத நாய் குட்டியால் ஒருவர் உயிரிழப்பு

மூன்று மாத நாய்க்குட்டியின் நக கீறல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு , தம்பித்துரை வீதியை சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று மாத காலம் நிரம்பிய நாய்க்குட்டி ஒன்று அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகத்தினால் கீறியுள்ளது. நகத்தினால் கீறி இரண்டு நாட்களின் பின்னர் நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது. அந்நிலையில் நாய்க்குட்டி நகத்தினால் கீறியதற்கு உரிய முறையில் சிகிச்சை பெற தவறி இருந்த […]

Continue Reading

198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து மாணவன் சாதனை

198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை! பொறியியலாளராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவதே தனது எதிர்கால லட்சியம் என 2ஆயிரத்து 21ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவன் தெரிவித்துள்ளான். நேற்றிரவு வெளியாகிய 2 ஆயிரத்து 21ஆம் ஆண்டு தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் […]

Continue Reading

வேலணையில் தாய்க்கும் மகளுக்கும் கத்தி குத்து

தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்ப பெண் மற்றும் அப்பெண்ணின் மகள் ஆகியோர் மீது நபர் ஒருவர் வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு , தானும் அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார். சம்பவம் தொடர்பில் அறிந்த […]

Continue Reading

கச்சதீவு ஆலயத்தின் திருப்பலி நிகழ்வு இன்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்டது

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். மேலும் இவ் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந் நிகழ்வில் வடமாகாண கடற்படை தளபதி பிரியந்த […]

Continue Reading

யாழ் மாநகரத்தின் மின்சாரத் துண்டிப்பை ஆளுநர் மீள்பரிசீலனை கோரிக்கை

யாழ் மாநகரத்தின் மின்சாரத் துண்டிப்பை ஆளுநர் மீள்பரிசீலனை செய்யவேண்டும்.. யாழ் நகரப் பகுதிகளில் மின்சார சிக்கனம் என்ற போர்வையில் மின் துண்டிப்பை மேற்கொள்வதை வடமாகாண ஆளுநர் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என யாழ் மாநகர பிரதி முதல்வர் துரைராசா ஈசன் வேண்டுகோள் விடுத்தார். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் உள்ளுராட்சி மன்றங்களில் மின்சார சிக்கனத்தை பேணுமாறு […]

Continue Reading

கச்சதீவு செல்ல பொதுமக்கள் குறிக்கட்டுவானில் இருந்து புறப்பட்டனர்

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையிலிருந்து கச்சதீவு செல்வதற்காக பொதுமக்கள் குறிக்கட்டுவானில் இருந்து புறப்பட்டனர். இன்று மதியம் ஒரு மணியளவில் குறிகட்டுவானிலில் தரித்து நின்ற வடதாரகை மூலம் கச்சதீவு செல்வதற்கான படகு பயணத்தை இலங்கை கடற்படை ஒழுங்கு செய்தது. மதகுருமார்,பக்தர்கள், சுகாதார பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளனர். இதேவேளை இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக சிநேகபூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக வடபகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர் […]

Continue Reading